4:2:2கீர்த்தனம்(ஆதி தாளம் ) -02
ராகம்: மாயாமாளவ கௌளை
தாளம்: ஆதி
பல்லவி
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ
அனுபல்லவி
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
சரணம் 1
பங்கயச் சிலம்பைந்தாடப் பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப் பொங்குமுடனே உரித்து சரித்த புலித்தோல் அசைந்தாட
செங்கையில் ஏந்திய மான் மழுவாட செம்பொற்குழை கண் முயலகனாட கங்கை இளம்பிறை செஞ்சடையாடக் கனக சபைதனிலே
சரணம் 2
ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவும் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாடச் சிதம்பரத்தேர் ஆட
பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும்
பூஜித்துக்கொண்டு நின்றாடக் கனக சபைதனிலே
சரணம் 3
நிர்த்த கணபதி வேலர் நின்றாட நின்றயன் மாலொடு இந்திரன் ஆட முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட
மெய்ப் பத்தி மேவும் பதஞ்சலியாட வியாக்கிர பாதரும் நந்தியும் ஆட ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட
தாளம்: ஆதி
பல்லவி
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ
அனுபல்லவி
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
சரணம் 1
பங்கயச் சிலம்பைந்தாடப் பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப் பொங்குமுடனே உரித்து சரித்த புலித்தோல் அசைந்தாட
செங்கையில் ஏந்திய மான் மழுவாட செம்பொற்குழை கண் முயலகனாட கங்கை இளம்பிறை செஞ்சடையாடக் கனக சபைதனிலே
சரணம் 2
ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவும் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாடச் சிதம்பரத்தேர் ஆட
பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும்
பூஜித்துக்கொண்டு நின்றாடக் கனக சபைதனிலே
சரணம் 3
நிர்த்த கணபதி வேலர் நின்றாட நின்றயன் மாலொடு இந்திரன் ஆட முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட
மெய்ப் பத்தி மேவும் பதஞ்சலியாட வியாக்கிர பாதரும் நந்தியும் ஆட ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட