4:2:3கீர்த்தனம்(ஆதி தாளம் ) -03

ராகம்: ஆந்தோளிகா / ஆபோகீ
 தாளம்: ஆதி

 பல்லவி

சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா

 அநுபல்லவி

சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
 தேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு

 சரணம் 1

 காரானை மாமுகத்தைந்து கரத்தானை கற்பக ராயனை முக்குறுணீயாணை
 சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல் வாழ் தேவர் சிறை மீட்கும் சேவற்க்கொடியானை

 சரணம் 2 

சிங்காரமான சிவகங்கையில் மூழ்கி சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து பாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ

 சரணம் 3

சித்தர் பரவும் திருமூலத்தானை சிற்றம்பலமென்னும் பேரம்பலத்தானை அட்ட திக்கும் புகழம்பலவாணனை ஆண்டவனைத் தில்லைத் தாண்டவ ராயனை

 சரணம் 4

 நல்ல திருவிழா ஆணித்திருதேரும் நாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும் தில்லை மூவாயிரவர் வளர் வீதியும் திருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும்

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்