4:2:3கீர்த்தனம்(ஆதி தாளம் ) -03
ராகம்: ஆந்தோளிகா / ஆபோகீ
தாளம்: ஆதி
பல்லவி
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா
அநுபல்லவி
சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
தேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு
சரணம் 1
காரானை மாமுகத்தைந்து கரத்தானை கற்பக ராயனை முக்குறுணீயாணை
சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல் வாழ் தேவர் சிறை மீட்கும் சேவற்க்கொடியானை
சரணம் 2
சிங்காரமான சிவகங்கையில் மூழ்கி சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து பாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ
சரணம் 3
சித்தர் பரவும் திருமூலத்தானை சிற்றம்பலமென்னும் பேரம்பலத்தானை அட்ட திக்கும் புகழம்பலவாணனை ஆண்டவனைத் தில்லைத் தாண்டவ ராயனை
சரணம் 4
நல்ல திருவிழா ஆணித்திருதேரும் நாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும் தில்லை மூவாயிரவர் வளர் வீதியும் திருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும்
தாளம்: ஆதி
பல்லவி
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா
அநுபல்லவி
சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
தேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு
சரணம் 1
காரானை மாமுகத்தைந்து கரத்தானை கற்பக ராயனை முக்குறுணீயாணை
சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல் வாழ் தேவர் சிறை மீட்கும் சேவற்க்கொடியானை
சரணம் 2
சிங்காரமான சிவகங்கையில் மூழ்கி சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து பாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ
சரணம் 3
சித்தர் பரவும் திருமூலத்தானை சிற்றம்பலமென்னும் பேரம்பலத்தானை அட்ட திக்கும் புகழம்பலவாணனை ஆண்டவனைத் தில்லைத் தாண்டவ ராயனை
சரணம் 4
நல்ல திருவிழா ஆணித்திருதேரும் நாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும் தில்லை மூவாயிரவர் வளர் வீதியும் திருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும்