4:3)சப்தம் -1

சப்தம் 

நாட்டிய உருப்படிகளின் வரிசையில் மூன்றாவதாக வரும் உருப்படி சப்தமாகும். முதன்முதலில் அபிநயத்தை அறிமுகப்படுத்தும் உருப்படியும் இதுவாகும். இவ்வுருப்படிகள் சிவபெருமான், கண்ணன், முருகப்பெருமான், ஸ்ரீராமன் மேல் பாடப்பட்டவையாகும். ஆரம்பத்தில் சப்தங்கள் யாவும் காம்போஜி ராகத்தில் தான் பாடப்பட்டுவந்தன. ஆனால் இப்போது ராகமாலிகாவிலும் பாடப்படுகிறது. இவ்வுருப்படி பெரும்பாலும் மிஸ்ரசாவு தாளத்தில்தான் அமைந்துள்ளது. இது பத்து தொடக்கம் பதினைந்து நிமிடங்களுக்கு அமைந்திருக்கும். சப்தம் என்ற சொல்லுக்கு சிறப்புப்பொருள் உண்டு. அதாவது தெய்வத்தினை புகழ்ந்து பாடுதல் எனப்பொருள்படும். சப்தம் என்ற இவ்வுருப்படி ஜதியுடன் ஆரம்பமாகும். இதனைத்தொடர்ந்து சாகித்யம் இடம்பெறும். இதற்க்கு அபிநயம் காண்பிக்கப்படுகிறது. சாகித்யத்துக்கு நேர்க்கைகளும் சஞ்சாரி பாவத்திற்குரிய கைகளும் செய்யப்படுகின்றன. இவ்வுருப்படியின் ஆரம்பத்திலும் இடையிலும் முடிவிலும் ஜதிகள் அமைந்துள்ளன. பாடலில் கருத்து முகபாவத்தாலும், முத்திரைகளினாலும் வெளிக்காட்டப்படுகிறது. ஒவ்வொரு கண்டிகைக்கும் அபிநயம் செய்தபின் தொடர்ந்துவரும் ஜாதிகளுக்கு கோர்வை செய்யப்படுகின்றது. சப்தத்தில் இராமாயணம், தசாவதாரம், கஜேந்திர மோஷம் முதலிய தொடர்கதைகளை வைத்தோமைத்த நீண்ட உருப்படிகளும் உண்டு. கிருஷ்ண சப்தம், மண்டூக சப்தம், கோதண்டராமா சப்தம் என்று சங்கங்கள் உண்டு. சப்தத்தின் இறுதியில் “சாலமுரே” அல்லது “நமோஸ்துதே” இடம்பெறும். இதன் பொருள் வணக்கம் செலுத்துவது என்பதாகும்.

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்