(6:10.2)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .2

கமாஸ் 

இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த மத்திமம் (ம1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]: ஆரோகணம்: ச ம1 க3 ம1 ப த2 நி2ச அவரோகணம்: ச நி2த2 ப ம1 க3 ரி2 ச இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும். 


 உருப்படிகள் வகை                       உருப்படி இயற்றியவர்        தாளம்     கிருதி 

ப்ரோசே வாரெவருராமைசூர்        வாசுதேவாச்சாரியார்     ஆதி         கிருதி

"ஸீதாபதே"                                               தியாகராஜர்                          ஆதி         கிருதி

ஸுஜன ஜீவன                                          தியாகராஜர்                          ரூபகம்  கிருதி

"ஸந்தான கோபால க்ருஷ்ணம்"முத்துஸ்வாமி தீக்ஷிதர்      ரூபகம்

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்