(6:7:1)இசைக் கருவிகளின் அமைப்பு -1

இசைக்கருவிகள்  

இசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு பெறச்செய்வதற்கும், நடனக்கச்சேரிகளில் மேலும் மெருகூட்டுவதற்கும் பயன்படுகின்றன. இசையொலியின் (நாதம்) பல நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும், இசையறிவில் வளர்ந்து இசையின் அழகைத் துய்ப்பதற்கும், சிறப்பாக மொழிகலவாத் தனியிசையின் மேன்மையை உணர்வதற்கும் இவை பெரிதும் பயன்படுகின்றது. இசைக் கருவிகளை வாத்தியக்கருவிகள் எனவும் அழைப்பர்.

இசைக்கருவிகளின் வகைகள் இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை: நரம்புக் கருவிகள் (தந்தி வாத்தியங்கள் ) யாழ், தம்புரா, வீணை, வயலின், கோட்டு வாத்தியம் ஆகியன நரம்புக் கருவிகள். துளைக் கருவிகள் (காற்று வாத்தியங்கள் ). புல்லாங்குழல், நாதசுரம், கிளாரினெட் முதலியவை துளைக்கருவிகள். தோற்கருவிகள் (அவனத அல்லது கொட்டு வாத்தியங்கள் ). தவில், மிருதங்கம், கஞ்சிரா, பறை முதலியவை தோற்கருவிகள். கன கருவிகள் (கஞ்சக் கருவிகள் ). ஜால்ரா, குழித்தாளம், ஜலதரங்கம் முதலியவை கனகருவிகள்.

அரங்கிசையில் வாசிக்கப்படும் முக்கிய கருவிகள் 
வீணை 
கோட்டு வாத்தியம் 
புல்லாங்குழல் 
நாதசுவரம் 
வயலின்

அரங்கிசையில் வாசிக்கப்படும் துணைக்கருவிகள் 

வயலின் 
மிருதங்கம்
 தவில் 
கஞ்சிரா

கிராமிய இசைக்கருவிகள் 
எக்காளம் 
திருச்சின்னம் 
கஞ்சிரா 
பூசாரிக் கைச்சிலம்பு 
தவண்டை 
உடுக்கை 
தம்பட்டம் 
நகரா (இசைக்கருவி)

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்